கோவையில் பில்லூர் குடிநீர் குழாய் சேதம்...

published 7 months ago

கோவையில் பில்லூர் குடிநீர் குழாய் சேதம்...

கோவை: கோவை மாநகராட்சியில்  சுகுணாபுரம், கஸ்தூரி நகர் உள்ளிட்ட பகுதியில் பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோக்கபட்டு வருகிறது. 

இந்நிலையில் 92 வது வார்டுக்கு உட்பட்ட கஸ்தூரி நகர் பகுதியில் இரவு சுமார் 1:30 மணியளவில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அதிகப்படியான நீர் வெளியேறியது. இதனால் சாலை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

பின்னர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், 92வது வார்டு கவுன்சிலரும் மாநகராட்சி துணை மேயருமான வெற்றிசெல்வன் மேற்பார்வையில் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து சாலையை செப்பனிடும் பணியை மேற்கொண்டனர். 
இதனால் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து சீராகி வருகிறது.

இப்பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லம் உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe