கோவை-திருச்சி சாலை சுத்தமாகப்போகுது! கமிஷனர் கொடுத்த உத்தரவு!

published 6 months ago

கோவை-திருச்சி சாலை சுத்தமாகப்போகுது! கமிஷனர் கொடுத்த உத்தரவு!

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோயம்புத்தூர் திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்த ஆய்வின் போது கோயம்புத்தூர் திருச்சி சாலை பகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேசன் (IOC) ஆகிய பணிகளுக்காக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக குழாய்கள் பதிக்கப்பட்ட சாலைகளின் ஓரங்களில் மண் குவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர்  இப்பகுதியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சாலையில் குவிந்துள்ள மண்களை உடனடியாக அகற்றி சாலையினை சீர் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், நடைபெற்றுவரும் திட்டப்பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe