மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

published 6 months ago

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

கோவை: மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு SEED- (Scheme for Economic Empowerment DNT's) திட்டம் மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.

கல்விக்கான அதிகாரமளித்தல் (சீர்மரபினர்களுக்கு மத்திய/மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நல்ல தரமான பயிற்சி அளித்தல்), சுகாதாரம் (சீர்மரபினர்களுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அளித்தல்), வாழ்வாதாரங்களை எளிதாக்குதல் (DNT/NT/SNT சமூக நிறுவனங்களின் சிறிய குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்த சமூக மட்டத்தில் வாழ்வாதாரத்திற்கான முயற்சியை எளிதாக்குதல்), நிலம் மற்றும் வீடு (சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதி உதவி வழங்குதல்)

ஆகியவை இந்த திட்டத்தின் செயல்படுத்தபடும்.  தகுதியுள்ள பயனாளிகள் மைய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe