டிபன் கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது…

published 6 months ago

டிபன் கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது…

கோவை: கோவை கவுண்டம்பாளையம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம்(43). இவர் அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். 

நேற்று சொக்கலிங்கம் அங்குள்ள வாட்டர் டேங்க் அருகே நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து மது குடிக்க பணம் தருமாறு கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் வாக்குவாதம் செய்து மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த சிலர் அங்கு ஓடி வந்தனர். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 

இது குறித்து சொக்கலிங்கம் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியது கவுண்டம்பாளையம் மீனாட்சி அம்மன் நகரை சேர்ந்த தொழிலாளி வினோத்(28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe