கோவை மக்களே எரிவாயு தொடர்பான குறைகளை தெரிவிக்க குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது...

published 6 months ago

கோவை மக்களே எரிவாயு தொடர்பான குறைகளை தெரிவிக்க குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது...

கோவை: கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து எண்ணெய் நிறுவன மேலாளர்கள் (தி/வா.இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், தி/வா.பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், தி/வா.ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன்), எரிவாயு முகவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொள்ளும் மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் 30.07.2024 அன்று மாலை 4.00 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக 2 வது தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வு தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து தீர்வு காணலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe