மீன் பிடிக்க விடமாட்டேங்குறாங்க! வலையுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மீனவர்கள்!

published 6 months ago

மீன் பிடிக்க விடமாட்டேங்குறாங்க! வலையுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மீனவர்கள்!

கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு மீன் வலைகளுடன் வந்த மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட குளங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வலைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்க வந்தனர். 

அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பல ஆண்டுகளாக கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் மீனவர்களாக மீன்பிடித்து வருகிறோம். கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மீன் பாசி குத்தகை உரிமம் வழங்கப்படுகிறது.  

குத்தகை உரிமை முடிந்தவுடன் மீனவர்கள் அனைவரும் சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து குளங்களிலும் மீன் பிடித்து வந்துள்ளோம். குறிப்பிட்டுள்ள அவர்கள், தற்போதைய கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் பாலமுருகன், சில மீனவர்களுடன் சேர்ந்து கொண்டு சில குளங்களில் மீன்பிடிக்க அனுமதி தர மறுக்கின்றனர்.

அந்தக் குளங்களில் மீன்பிடிக்கச் சென்றால் பாலமுருகன் எங்களை அச்சுறுத்துகிறார். இதனால் பெரும்பான்மையான மீனவ குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து குளங்களிலும் கோவை வட்ட மீனவர் சங்க உறுப்பினர்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe