மனைவியும் மகளும் பிரிந்து சென்ற விரக்தியில் வாலிபர் தற்கொலை..!

published 2 years ago

மனைவியும் மகளும் பிரிந்து சென்ற விரக்தியில் வாலிபர் தற்கொலை..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவையில் மனைவியும் மகளும் பிரிந்து சென்ற விரகத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடவள்ளியை அடுத்த சிக்கராயபுரத்தை சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (39). எலகெட்ரிசியனாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். 

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாண்டீஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மகளும், ஜெய் கணேஷ் மட்டும் கோவையில் வசித்து வந்தனர். 

இதனிடையே கடந்த 19ம் தேதி கோவை வந்த பாண்டீஸ்வரி மகளை அழைத்துக் கொண்டு கேரளா சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதில் ஜெய் கணேஷ் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.

இந்த சூழலில்,  நேற்று முன்தினம் வீட்டில் தனிமையிலிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே பார்த்த போது ஜெய் கணேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெய் கணேஷ் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe