பணம், நகை இல்லை; கோவையில் திருடச்சென்ற வீட்டில் பொருட்களை வீசியயெறிந்த கொள்ளையர்!

published 6 months ago

பணம், நகை இல்லை; கோவையில் திருடச்சென்ற வீட்டில் பொருட்களை வீசியயெறிந்த கொள்ளையர்!

கோவை: கோவை ஆர்எஸ் புரம் அருகே உள்ள பிஎன் புதூர் மாணிக்கம் தெருவில் மணிகண்டன் (45) என்பவர் மளிகை நடத்தி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

மறுநாள் கடை திறக்க மணிகண்டன் சென்றார். அப்போது கடையின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடைக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. பல்வேறு பொருட்களை ஆங்காங்கே தூக்கி வீசியிருந்தனர்.

பணம் அதிகம் இல்லாத நிலையில் திருடர்கள் மளிகை சாமான்களை தூக்கி போட்டு சென்று விட்டதாக தெரிகிறது. கல்லா பெட்டியில் இருந்த 400 ரூபாயை திருடி சென்று விட்டனர்.

பிஎன்புதூர் விவேகானந்தர் தெருவில் வசிக்கும் பாபு (56) என்பவர் கேரளா மாநிலம் வயநாடு சென்றிருந்தார். இவர் அங்கேயிருந்து வீட்டிற்கு திரும்ப வந்து பார்த்தபோது அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

பீரோவில் இருந்த 1500 ரூபாய் திருடப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்களை திருடர்களை கலைத்து போட்டிருந்தனர். துணி மற்றும் நாற்காலிகளை ஆங்காங்கே தூக்கி வீசி சென்றிருந்தனர்.

இந்த இரு இடங்களில் நடந்த திருட்டு தொடர்பாக ஆர்எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருடர்கள் நகை, பணம் கிடைக்காத விரக்தியில் வீடு, கடைகளில் பொருட்களை தூக்கி வீசி சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

இரு இடங்களில் ஒரே கும்பல் கைவரிசை காட்டியதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe