மேயர் தேர்தல்... கண்ணீருடன் வெளியேறிய கோவை கவுன்சிலர்...

published 6 months ago

மேயர் தேர்தல்... கண்ணீருடன் வெளியேறிய கோவை கவுன்சிலர்...

கோவை: கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.  மேயர் பதவிக்கு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வின்செண்ட் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, நேரு ஆகியோர் முன்னிலையில் கவுன்சிலர்கள் உடனான கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்திற்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் வருகை 
புரிந்த நிலையில், மேயர் பதிவிக்கு எதிர்பார்த்து இருந்த கவுன்சிலர்கள் மீனாலோகு, சாந்திமுருகன் உள்ளிட்டோரும் வருகை புரிந்திருந்தனர்.

இந்நிலையில் சாந்திமுருகனுக்கு பேச நேரம் தரப்பட்ட போது ஆவேசத்துடன் பேசியுள்ளார். அப்போது அமைச்சர் நேரு மற்றும் முத்துசாமி சமாதானம் செய்யவே அதனை ஏற்றுக்கொள்ளாத அவர் கண் கலங்கிய படி வெளியேறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe