விஜய் சேதுபதி குறித்து பேசிய அர்ஜுன் சம்பத்; அபராதம் விதித்த கோவை நீதிமன்றம்!

published 6 months ago

விஜய் சேதுபதி குறித்து பேசிய அர்ஜுன் சம்பத்; அபராதம் விதித்த கோவை நீதிமன்றம்!

கோவை: நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவதூறு பேச்சுக்காக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு அபராதம் விதித்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதையாக பேசியதாகவும் அதனால், விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரூ.1,001 பரிசு வழங்கப்படும் என்றும் இ.ம.க தலைவர் அர்ஜுன் சம்பத் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கருத்து பதிவு செய்தார். 

இதுகுறித்த வழக்கு கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்றைய விசாரணையில் தான் அவ்வாறு பேசியதாக அர்ஜுன் சம்பத் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு, ரூ.4,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe