இளம்பெண்ணிடம் சில்மிஷம்- வாலிபர் மீது வழக்குப்பதிவு…

published 6 months ago

இளம்பெண்ணிடம் சில்மிஷம்- வாலிபர் மீது வழக்குப்பதிவு…

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் சம்பவத்தன்று குனியமுத்தூர் மைல் கல் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போடவே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

இது குறித்து இளம்பெண் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் இளம்பெண்ணின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்தது உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த தொழிலாளி ஆனந்த் வீரா(28) என்பது தெரியவந்தது. 

போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe