வாட்ஸ் ஆப்பில் வந்த லிங்க்- கோவையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர் நபர்கள்...

published 6 months ago

வாட்ஸ் ஆப்பில் வந்த லிங்க்- கோவையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர் நபர்கள்...

கோவை: கோவை மருதமலை ரோடு பிஎன் புதூரை சேர்ந்தவர் ராமராஜ்(69). இவர் அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வாட்ஸ் ஆப்பிற்கு குறுந்தகவல் வந்தது, அதில், தங்களது நிறுவன பங்குகளை வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய ராமராஜ், அதன் லிங்க் கை கிளிக் செய்து தனது விவரங்களை பதிவிட்டார். 

தொடர்ந்து பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்பிய ராம்ராஜ் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. 13.98 லட்சம் அனுப்பினார். ஆனால் அந்த நபர் கூறியபடி லாபம் கிடைக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து ராமராஜ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதேபோல், சுந்தராபுரம் மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(44). இவர் சிட்கோவில் வெல்டிங் பணிகளை ஆர்டர் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். 

இவருக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த தகவலில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய செந்தில்குமார் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.27.83 லட்சம் அனுப்பினார். ஆனால் செந்தில்குமாருக்கு எந்த விதமான லாபமும் கிடைக்கவில்லை. ஆசை வார்த்தை கூறி மொத்தமாக ரூ. 27.83 லட்சம் மோசடி செய்து விட்டனர். 

இது குறித்து செந்தில்குமார் கோவை மாநகர சைபர் கிரைமில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe