பஸ்சில் பெண்ணிடம் 98 ஆயிரம் ரூபாய் திருட்டு…

published 6 months ago

பஸ்சில் பெண்ணிடம்  98 ஆயிரம் ரூபாய் திருட்டு…

கோவை: கோவை செல்வபுரம் கல்லாமேட்டை சேர்ந்தவர் ராபியம்மா(42). இவர் நேற்று சொந்த வேலை காரணமாக உக்கடம் சென்றார். 

பின்னர் அரசு பேருந்தில் உக்கடத்தில் இருந்து செல்வபுரம் சென்றார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலில் அவரது மணி பர்சை யாரோ திருடி சென்று விட்டனர். அதில் அவர் ரூ. 98 ஆயிரம் வைத்திருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe