கோவையில் நடைபெற்ற சுதந்திர தினவிழா- வாகா அணி வகுப்பை போலவே நடத்தி அசத்திய போலிசார்...

published 6 months ago

கோவையில் நடைபெற்ற சுதந்திர தினவிழா- வாகா அணி வகுப்பை போலவே நடத்தி அசத்திய போலிசார்...

கோவை: சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வ உ சி மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து வாகா எல்லையில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பை போலவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் இந்த அணிவகுப்பை மேற்கொண்டனர். 

அந்த நிகழ்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இதில் 52 பேர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் முதல்முறையாக இது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe