கல்லூரி உதவி பேராசிரியை உட்பட 2 பேர் வீடுகளில் கொள்ளை…

published 6 months ago

கல்லூரி உதவி பேராசிரியை உட்பட 2 பேர் வீடுகளில் கொள்ளை…

கோவை: கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி பிரேமலதா(48). இவர்களது மகள் திருமணமாகி ஆர்.எஸ்.புரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று பிரேமலதா வீட்டை பூட்டி விட்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். 

அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் உங்களது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து பிரேமலதா உடனே வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகையை காணவில்லை. வீட்டில் புகுந்த மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளான். 

இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமலதா வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

கோவை வெள்ளலூர் சக்தி விநாயகர் நகரை சேர்ந்தவர் புத்தா. இவரது மனைவி தேவி பிரசன்னா(43). தனியார் கல்லூரி உதவி பேராசிரியை. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார். 

பின்னர் அங்கிருந்து நேற்று கோவை திரும்பினர். வீட்டுக்கு சென்றபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ. 5 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தேவி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடனை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe