மருத்துவமனையில் சிகிச்சையின் போது மாஜி அரசு ஊழியரின் 7 பவுன் செயின் திருட்டு...

published 6 months ago

மருத்துவமனையில் சிகிச்சையின் போது மாஜி அரசு ஊழியரின் 7 பவுன் செயின் திருட்டு...

கோவை: திருச்சி அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(61). இவர் மத்திய பாதுகாப்பு துறையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். 

இந்த நிலையில், அவர் சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் கோவை மருதமலை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அப்போது அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை கழட்டி தனது பேக்கில் வைத்திருந்தார்.
 

இதனையடுத்து 2 நாட்கள் கழித்து அவருக்கு மருத்துவமனையில் வேறு அறை ஒதுக்கப்பட்டது. அங்கு செல்வதற்காக தனது பேக்கை பார்த்தபோது அவரது தங்க செயின் திருடு போயிருப்பது தெரியவந்தது. மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்து ராமகிருஷ்ணன் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe