கோவையில் சண்டையை விலக்கிவிட்ட மாணவர் மீது தாக்குதல்!

published 6 months ago

கோவையில் சண்டையை விலக்கிவிட்ட மாணவர் மீது தாக்குதல்!

கோவை: கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பரமானந்தம். இவரது மகன் ஆனந்த பத்மநாபன்(20). இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர்களிடம் சிலர் குடிபோதையில் சண்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை கண்ட ஆனந்த பத்மநாபன் அங்கு சென்று சண்டையை விலக்கி விட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி ஆனந்த பத்மநாபனை கற்களால் சரமாரியாக தாக்கினர். 

பின்னர் அவரை மிரட்டி விட்டு சென்றனர். இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில் கல்லூரி மாணவரை தாக்கியது மாச்சம்பாளையம் திருநகரை சேர்ந்த தொழிலாளி சதீஷ்(28), குறிச்சியை சேர்ந்த கார்த்திக்(29), மதுக்கரை ரோடு சீனிவாசா நகரை சேர்ந்த பிரவீன் குமார்(28) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe