கோவையில் ஆசிரியையை ஏமாற்றி திருமணம்- கணவர் மீது வழக்கு…

published 5 months ago

கோவையில் ஆசிரியையை ஏமாற்றி திருமணம்- கணவர் மீது வழக்கு…

கோவை: கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா (33). ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரின் மகன் அப்துல்லா( 55) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

அப்துல்லா ஏற்கனவே திருமணமான தகவலை தனது மனைவி ஷர்மிளாவிடம் மறைத்துள்ளார் .மேலும் டிராவல்ஸ் அதிபர் என  பொய்யாக கூறி திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் அப்துல்லா கத்தார் நாட்டிற்கு வேலைக்கு செல்வதாக கூறி ஷர்மிலாவிடமிருந்து 11 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியிருந்தார். 

ஆனால் அவர் கத்தார் நாட்டிற்கு செல்லாமல் சர்மிளாவை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இதுகுறித்து  ஷர்மிளா கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.  

புகாரின் பேரில் போலீசார் கும்பகோணத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரின் மகன் அப்துல்லா (55) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe