கோவை அரசு மருத்துவமனையில் வாகனம் நிறுத்துவதில் தகராறு...

published 5 months ago

கோவை அரசு மருத்துவமனையில் வாகனம் நிறுத்துவதில் தகராறு...

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு வரும் வாகனங்களை ஒழுங்கு படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
 

இந்நிலையில், நேற்று அங்கு பயிற்சி டாக்டர்கள் விடுதி அருகே மலுமிச்சம் பட்டியை சேர்ந்த மாறன்(70) என்ற காவலாளி பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரது பைக்கை நிறுத்த முயன்றார். அப்போது காவலாளி மாறன் வாகனத்தை இங்கு நிறுத்த கூடாது, வேறு பக்கம் நிறுத்துமாறு கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் காவலாளியை தாக்கினார். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து மாறன் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில், காவலாளியை தாக்கியது குறிச்சி பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த வேலுசாமி(39) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe