கோவையில் LIC ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கை...

published 5 months ago

கோவையில் LIC ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கை...

கோவை: பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பிற்கு உத்திரவாதம், பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமையை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க கோரி LIC பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தினர்.

 

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 26 LIC அலுவலகங்களுக்கு முன்பு பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பிற்கு உத்திரவாதம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன் கொடுமைகளை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தியும், பதாகைகளை ஏந்தியும் அமைதி வழியில்  வலியுறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்து.

அதன்படி கோவையில் திருச்சி சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட எல்ஐசி பணியாளர்கள் மெழுகுவர்த்தி மற்றும் பதாகைகளை ஏந்தி அமைதியான வழியில் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe