கோவையில் ஆட்சியரிடம் இறுதி சடங்கு கோலத்தில் வந்து மனு அளித்த பெண்கள்...

published 1 week ago

கோவையில் ஆட்சியரிடம் இறுதி சடங்கு கோலத்தில் வந்து மனு அளித்த பெண்கள்...

கோவை: கோவை தடாகம் சாலை வெங்கடாபுரம் பகுதியில்  உள்ள தெலுங்குபாளையத்தில் சுமார் 100 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் 2000ம் ஆண்டில் பட்டா ரத்து செய்யப்பட்ட சில நபர்களும் அங்கேயே குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் புதிதாக பட்டா வழங்கப்பட்ட இவர்கள் அங்கு வீடு கட்டி குடியேறுவதற்கு முற்படும் போது அங்கு இருக்கக்கூடியவர்கள் இடையூறு விளைவிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து தீர்வு தர வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் சிலர் இறுதிச்சடங்கில் செய்வதை போல தலைக்கு மேல் துணியை பிடித்தவாறு வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கூறினால் காவல்துறையில்  புகார் அளிக்க கூறுவதாகவும் காவல் துறையில் புகார் அளிக்க சென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமே கூறுங்கள் என்று தங்களை அலைகழிப்பதாக குற்றம் சாட்டினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe