வீட்டில் நகையை திருடிய பெண் கைது…

published 5 months ago

வீட்டில் நகையை திருடிய பெண் கைது…

கோவை: கோவை வடவள்ளி லட்சுமி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி சுஜாதா(54). இவரது வீட்டில் தொண்டாமுத்தூர் காந்திநகரை சேர்ந்த சின்னதங்கம்(47), அவரது மகன் சபரீசன்(22) ஆகியோர் வேலை பார்த்தனர்.

 இந்நிலையில், நேற்று வீட்டில் அலமாரியை சுஜாதா திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 3 கிராம் தங்க கம்மல் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சுஜாதா வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வீட்டில் வேலை செய்த இருவர் மீதும் சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தார். 

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், வீட்டு வேலை செய்து வந்த சின்னதங்கம் நகையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe