கோவை சிறையில் கைதி உயிரிழப்பு!

published 1 week ago

கோவை சிறையில் கைதி உயிரிழப்பு!

கோவை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன் (66). இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, 6 ஆண்டு சிறை தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிறையில் இருந்த அவர் சர்க்கரை மற்றும் நரம்பியல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்று கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறை வார்டன் லதா ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe