கோவையில் பர்னிச்சர் குடோனில் பயங்கர விபத்து…

published 1 week ago

கோவையில் பர்னிச்சர் குடோனில் பயங்கர விபத்து…

கோவை: கோவை சின்னவேடம்பட்டி, வயல் தோட்டம் பகுதியில் பர்னிச்சர் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று மதியம் திடீரென தீப்பற்றி மலமலவென எரிந்துள்ளது.

இதனை பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியதோடு அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா என சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe