கோவை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

published 2 years ago

கோவை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

 

கோவை: கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று மாநகராட்சி கமிஷனார் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று கோவை மாநகராட்சி  அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேயர் கல்பனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்துவரி, காலியிட வரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இன்று மொத்தம் 40 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் கல்பனா உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, அனைத்து மண்டல உதவி கமிஷனர்கள், அனைத்து துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe