கேரளாவிற்கு டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தல்- கோவையில் இருவர் மீது குண்டாஸ்…

published 5 months ago

கேரளாவிற்கு டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தல்- கோவையில் இருவர் மீது குண்டாஸ்…

கோவை: கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் காரமடை அருகே சின்ன தொட்டிபாளையம்- காந்தி நகர் செல்லும் சாலையில் கடந்த 20.8.24 அன்று சோதனை மேற்கொண்டனர்.

இதில் அங்கு உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த  5 ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த முருகலிங்கம் (வயது 39), கோவை பாலத்துறையை சேர்ந்த சுதாகர் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே முருகலிங்கம், சுதாகர் ஆகிய இருவரும் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் கள்ளச் சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் குண்டர் சட்டத்தில் அடைக்க இன்ஸ்பெக்டர் ராஜகுமார், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்று முருகலிங்கம், சுதாகர் ஆகிய இருவரின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் சிறையில் உள்ள முருகலிங்கம், சுதாகர் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe