ஜாமின் கிடைக்கப்பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி- வானதி சீனிவாசன் தெரிவித்த கருத்து...

published 4 months ago

ஜாமின் கிடைக்கப்பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி- வானதி சீனிவாசன் தெரிவித்த கருத்து...

கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பாரதி பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பாஜக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது

அமைச்சர்களுக்கு வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம், பொதுமக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறது மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் புரிந்து கொள்வதில்லை எனவும்

மேலும் தமிழக முதலமைச்சருக்கு இவ்வளவு சீக்கிரமாக மறதி ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை எனவும்

இன்று தியாக சுடராக அவரை பார்க்கும் முதலமைச்சர் அன்றைக்கு அவரது ஊருக்கே சென்று அவருடைய வாயால் பேசிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் பேசியதை நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம் எனவும் இந்த மறதி தமிழகத்திற்கு நல்லதில்லை என்பது எங்களது கருத்து எனவும்

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது.

நிபந்தனைகளை அவர் சரியாக பின்பற்றுகிறாரா என்பதை அமலாக்கத்துறை கண்காணிக்க வேண்டும்.

தமிழக அரசு அவருக்கு ஆதரவான நிலையில் இருக்கக்கூடிய சூழலில், அவரும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ள சூழலில் அவரின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என  தெரிவித்தார் .

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe