கோவையில் குளிர்கால குல்லா அணிந்து கொண்டு வீட்டில் திருட்டு- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

published 4 months ago

கோவையில் குளிர்கால குல்லா அணிந்து கொண்டு வீட்டில் திருட்டு- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை, ஆலாந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள், ரூ.5.32 லட்சம் கொள்ளை அடிக்கும்  மர்ம நபரின் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


கோவை, ஆலாந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா (27). இவர் கடந்த 27 ஆம் தேதி குடும்பத்துடன் அவிநாசியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து வீட்டை பார்க்கும் பொழுது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். 

அப்பொழுது பீரோக்குள் வைத்து இருந்த 22 சவரன் நகைகள், ரூ.5.32 லட்சம் திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போது அதில் அடையாளத்தை மறைப்பதற்காக மங்கி கேப், கை உறைகளை அணிந்து கொண்டு சாவகாசமாக மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. 

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபரை வலை வீசித் தேடி வருகின்றனர். தற்பொழுது வெளியாகி உள்ள சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/XF6bLjncsEc

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe