நாமக்கல் கண்டெய்னர் லாரி விவகாரம்- கோவையில் இருந்து சேலத்திற்கு அழைத்து செல்லப்பட்ட குற்றவாளி...

published 4 months ago

நாமக்கல் கண்டெய்னர் லாரி விவகாரம்- கோவையில் இருந்து சேலத்திற்கு அழைத்து செல்லப்பட்ட குற்றவாளி...

கோவை: கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த மாதம் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கட்டுகட்டாக பணம் கன்டெய்னர் லாரியில் எடுத்து சென்றனர். 

அப்போது அந்த கன்டெய்னர் லாரியை நாமக்கல் மாவட்ட போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கொள்ளையன் ஜூமாந்தீன் துப்பாக்கியால் சுடப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டார். அசர் அலி என்ற கொள்ளையனின் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் அவரின் காலில் குண்டு பாய்ந்தது. 

அவரை சிகிச்சைக்காக கடந்த வாரம் முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரின் வலது காலில் ரத்த குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால் ரத்தம் ஓட்டம் நின்று விட்டதால் அவரின் வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 3 மணி அளவில் அசர் அலி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe