தேசிய அறிவியல் தினம்- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு...

published 1 week ago

தேசிய அறிவியல் தினம்- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்  கண்காட்சி மற்றும் கருத்தரங்கு...

கோவை: இந்தியா முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளில் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல்/ முன்னுரிமை அளித்தல் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு  கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அறிவியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு  நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில்  பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் அறிவியலின் முக்கியத்துவம் அதில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அறிவியல் சார்ந்த வினாடி வினா,  போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe