கோவையில் பூத்தது நிஷா காந்தி மலர்கள்..! - வீடியோ

published 2 years ago

கோவையில் பூத்தது நிஷா காந்தி மலர்கள்..! - வீடியோ

கோவை:குளுமையான சீதோஷன நிலை உள்ள பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் நிஷா காந்தி மலர்கள்  நம்ம கோவையில் பூத்துள்ளது.

நிஷா காந்தி மலர்கள் ஆண்டுக்கு ஒரே ஒருமுறை, ஒரு நாள் மட்டும் பூக்கக்கூடியவை. தமிழக கேரள எல்லைப் பகுதியான தேனி மற்றும் இடுக்கி மாவட்ட பகுதிகளில் நிஷா காந்தி மலர் செடிகள் அதிக அளவில் உள்ளன.

அதிக வாசனையுடன் இரவில் மட்டுமே பூக்கும் இந்த மலர் குளுமையான சீதோஷன நிலை உள்ள இடங்களில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.

இந்த நிலையில், கோவை பகுதியில் இந்த வியக்கத்தக்க மலர்கள் மலர்ந்துள்ளன. செல்வபுரம் நாடார் வீதியில் கவின் என்பவரது வீட்டில் இந்த  நிஷா காந்தி மலர்கள் 12 மலர்ந்துள்ளன.

இந்த அதிசய மலர்களை அப்பகுதி மக்கள் கண்டு வியப்படைந்துள்ளனர்.

நிஷா காந்தி மலரின் வீடியோவை காண லிங்க்-ஐ சொடுக்கவும்  : https://www.youtube.com/watch?v=FT6oyHwm-UE

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe