கோவையில் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று ஆதரவு!!!

published 6 hours ago

கோவையில் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று ஆதரவு!!!

கோவை: கோவை சூலூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 32 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சோமனூருக்கு வருகை தந்து, உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விசைத்தறியாளர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், அமைதியான முறையில் தங்களது உரிமைகளுக்காக போராடி வரும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 

தொடர்ந்து ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டம், விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் உடனடி நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார். 

விசைத்தறியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe