பொள்ளாச்சியில் கோவில் மண்டபத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்டத் தொழிலாளி அடித்து கொலை: வாலிபர் கைது

published 2 years ago

பொள்ளாச்சியில் கோவில் மண்டபத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்டத் தொழிலாளி அடித்து கொலை: வாலிபர் கைது

கோவை: பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 40), தொழிலாளி. இவர் கடந்த 5 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதனால் அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வந்தார்.

சோமசுந்தரம் எப்போதும் வீட்டின் அருகே உள்ள பகவதியம்மன் கோவில் மண்டபத்திற்குச் சென்று தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று சோமசுந்தரம் வழக்கம்போல தூங்குவதற்கு மண்டபத்திற்குச் சென்றார். அங்குத் தனது நண்பர் பூபதி என்பவருடன் பேசிக் கொண்டு படுத்திருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் அங்கு மது பாட்டிலுடன் வந்தார். பின்னர் மண்டபத்தில் அமர்ந்து மதுகுடித்தார். இதனைப் பார்த்த சோமசுந்தரம் அந்த வாலிபரிடம் "கோவில் மண்டபத்தில் மது குடிக்கக் கூடாது, இங்கு இருந்து செல்" என்றார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து சோமசுந்தரத்தின் தலையில் தாக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சத்தம் போட்டார்.

அவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து கோட்டூர் காவல்துறையினர் அடிதடி வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த ராம்குமார் (29) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சோமசுந்தரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் அடிதடி வழக்கைக் கொலை வழக்காக மாற்றித் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe