மின் வயரை மிதித்து சிறுவன் பரிதாபமாக பலி

published 2 years ago

மின் வயரை மிதித்து சிறுவன் பரிதாபமாக பலி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் முறையாக பராமரிக்கப்படாத மின் வயரை மிதித்து சிறுவன் பரிதாமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம், வடவள்ளி அடுத்த தொண்டாமுத்தூர் சாலையில், தக்ஷா நிறுவனத்திற்குச் சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது, ஷென்ஸ்ரே என்று அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது, 

இந்த பகுதியில் தக்ஷா நிறுவனத்திற்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளது. இந்த நிலையில் இங்கு உள்ள குழந்தைகள் விளையாட்டு பூங்காவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த குழந்தைகள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று  விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்பொழுது, லக்சன் என்ற 9 வயது குழந்தை பூங்காவில் உள்ள மின்விளக்குக்காக பதிக்கப்பட்டு இருந்த மின்சார   ஒயரை, அங்கு பணியாற்றும்  பூங்கா பராமரிப்பாளர் வெளியே எடுத்துவிட்டதுடன், அதனை மீண்டும்  பூமிக்கடியில் பதிக்காமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளார், 

மாலை வேளையில் மின்விளக்கை எரிய விட்ட பொழுது, அந்த ஒயரில் மின்சாரம் வருவதை அறியாத, குழந்தை அந்த ஒயரின் மீது விழுந்து, மின்சாரம் தாக்கி உடனடியாக அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த வடவள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், மேலும் இது குறித்து இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe