கோவையில் காச நோயால் பாதிக்கப்பட்டவர் மனமுடைந்த தற்கொலை

published 2 years ago

கோவையில் காச நோயால் பாதிக்கப்பட்டவர் மனமுடைந்த தற்கொலை

கோவை: கோவை மதிபாளையம் பகுதியில், காசநோயால் பாதிக்கப்பட்ட நபர், விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த தென்கரை மதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான கருப்புசாமி. இவர் அந்த பகுதியில் கூலி வேலை வந்தார். கடந்த ஐந்து வருடமாக காச நோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்ட கருப்பசாமி எலி பாசானதைக் குடித்துள்ளார். சற்று நேரத்தில் மயக்கடைந்த கருப்பசாமியை மீட்ட உறவினர்கள், உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இது குறித்து பேரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe