கருணாநிதி பிறந்தநாள் இனி அரசு விழா : கோவையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகி ராஜேந்திரன்

published 2 years ago

கருணாநிதி பிறந்தநாள் இனி அரசு விழா : கோவையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகி ராஜேந்திரன்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கும் விதமாக கோவையில் திமுக.,வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மறைந்த மு.கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டது திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை தமிழகம் முழுவதிலும் உள்ள திமுக தொண்டர்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், கோவை விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினரும், திமுக நிர்வாகியுமான  ராஜேந்திரன் இன்று விமான நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பு தொடர்பான விவரத்தைக் கூறி  இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

மேலும், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளையும் விளக்கினார். 

இந்த நிகழ்ச்சியின் போது திமுக நிர்வாகிகளான நீலகிரி இளங்கோ, ஊட்டி ராஜ், செந்தில், இஞ்சினிய அய்யாசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe