கோவையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

published 2 years ago

கோவையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: கோவை ராமநாதபுரம் மாநகராட்சி  தொடக்கப் பள்ளியில்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தமிழக  மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  துவக்கி வைத்தார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நேற்று தொடங்கி வைத்தார். ரூ.33.56 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது இந்த திட்டம்.

இதனை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கோவை மாநகராட்சி மற்றும் மேட்டுப்பாளையம், மதுக்கரை ஆகிய இரு நகராட்சிகளில் இன்று முதல்கட்டமாக  காலை உணவு திட்டம் துவங்கப்படுகிறது.

கோவையில் இந்த திட்டத்தை இன்று காலை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவுகளை வழங்கினார்.

இந்த திட்டத்தின் மூலமாக கோவை மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரத்து 104 மாணவ,மாணவிகள்  பலன் அடைகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையர் பிரதாப் மேயர் கல்பனா ஆனந்தகுமார் கல்வி அதிகாரிகள், மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe