கோவையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது: 15 கிலோ குட்கா பறிமுதல்

published 2 years ago

கோவையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது: 15 கிலோ குட்கா பறிமுதல்

கோவை: கோவை வடவள்ளி போலீசாருக்கு குரும்பப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட  குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று சம்பத்குமார் (50) என்பவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட  குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார்  கடையில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ 200 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்காவை விற்பனை செய்த சம்பத்குமாரைக் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe