உதவி செய்வது போல் நடித்து 9-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த நர்சரி உரிமையாளர்

published 2 years ago

உதவி செய்வது போல் நடித்து 9-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த நர்சரி உரிமையாளர்

ஊட்டி: ஊட்டியைச் சேர்ந்தவர் சேகா் (50). இவர் தனியார் நா்சரி உரிமையாளராக உள்ளார். இவரது வீட்டின் அருகே 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சேகர் அந்த மாணவியைத் தனது காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அப்போது மாணவியை அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோர், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்குப் பரிசோதனையில் மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

போலீசாா் விசாரணையில், சேகா் அந்த மாணவியை 2 ஆண்டுகளாகப் பலாத்காரம் செய்ததும், வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதி, சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தார். பின்னர் ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னர் அவரை ஊட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe