கோவையில் சாலை விபத்து: வாலிபர் உள்பட இருவர் பலி

published 2 years ago

கோவையில் சாலை விபத்து: வாலிபர் உள்பட இருவர் பலி

கோவை: கோவை அன்னனூர் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கொட்டைபாளையம்-துடியலூர் சாலையில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மினி வேன்  திடீரென எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோகுலகிருஷ்ணனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பிளிச்சியை சேர்ந்தவர் பழனிசாமி (70). சம்பவத்தன்று  இரவு இவர் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் நடந்து சென்றார்.
அங்கு அவர் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது  அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென அவர் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் பழனிசாமி  பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலே பழனிசாமி இறந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe