காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் அப்சர்கானை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்திரவு

published 2 years ago

காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் அப்சர்கானை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்திரவு

கோவை: கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உ. பா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை ஐந்து பேரையும் மூன்று நாள்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் அதே வழக்கில் ஆறாவதாகக் கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து ஜெ. எம். 5 நீதிபதி சந்தோஷ் முன்பாக ஆஜர்படுத்தினார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் அப்சல்கானை நவம்பர் 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

அதையடுத்து காவல்துறை அப்சர்கானை கோவை மத்தியச் சிறைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பான என். ஐ. ஏ.-க்கு முழுமையாக மாற்றப்படுகிறது.

மேலும், தமிழக காவல்துறையிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை என். ஐ. ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வேலையில் தமிழகக் காவல்துறையினர் ஈடுபட்டுவருவதாகக் கோவையில் தமிழகக் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe