கோவையில் அமைதி வேண்டும் என்று வேண்டி சர்வ சமய பிரார்த்தனை

published 2 years ago

கோவையில் அமைதி வேண்டும் என்று வேண்டி சர்வ சமய பிரார்த்தனை

கோவை: கோவையில் அமைதி திரும்ப வேண்டி காங்கிரஸ் கட்சி சார்பில் சர்வ சமய பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அனைத்து மத்தத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு  கோவை மாநகர மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி சார்பாக, "கோவையில் அமைதி வேண்டும்" என்பதை வலியுறுத்தி  மத நல்லிணக்க சர்வ மதப் பிரார்த்தனை நடைபெற்றது.

கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின்  அலுவலகமான காமராஜர்  பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்தியக்  காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.

சர்வ சமய பிரார்த்தனையில் இந்து, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மத போதகர்கள் கலந்து கொண்டனர். அவரவர் மத முறைப்படி துதி வழிபாடு நடத்தி கோவையில் அமைதி திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

தொடர்ந்து அனைத்து மதத்தினரும் இணைந்து சமாதானத்தை வலியுறுத்தி வெள்ளைப்  புறாவைப் பறக்க விட்டனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மதங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe