ஆன்லைனில் பணத்தை இழந்த முதியவர்: துரிதமாக மீட்ட கோவை காவல்துறையினர்

published 2 years ago

ஆன்லைனில் பணத்தை இழந்த முதியவர்: துரிதமாக மீட்ட கோவை காவல்துறையினர்

கோவை: கோவை மாவட்டம் துடியலூர் இடிகரை பகுதியில் குமரவேல் (55) என்பவர் வசித்து வருகிறார். அவரது கைபேசி எண்ணிற்குக் கடந்த மாதம் 20-ஆம் தேதி அவருடையை ஆன்லைன் பேங்கிங் செயலி முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் புதுப்பிப்பதற்கு வங்கி சம்பந்தமான விபரங்களை அனுப்புமாறும் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனை  உண்மை என்று நம்பிய அவர் தன்னுடைய வங்கி விபரங்களைப் பதிவு செய்து அனுப்பியுள்ளார். அனுப்பிய சிறிது நேரத்திலேயே அவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டது.

இது சம்பந்தமாக முதியவர்   உடனடியாக ஆன்லைன் பண மோசடி புகார் எண் 1930-ல் தொடர்பு கொண்டு தன்னுடைய பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு புகார் தெரிவித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் பணத்தை இழந்த முதியவருக்கு விரைந்து மீட்டுக் கொடுக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்  உத்தரவின் பேரில், சைபர் குற்றக் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான சைபர் குற்றக் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு  ரூ.1,81,000 பணத்தை மீட்டு அவருடைய வங்கிக் கணக்கிற்குத் திரும்பப் பெற்றுக் கொடுத்தனர்.

துரிதமாகச் செயல்பட்டு பணத்தை  மீட்டதற்கான ஆவண சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று பாதிக்கப்பட்டவரிடம் வழங்கினார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு, ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனச் செயலிகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் தங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும், சைபர் குற்றப் புகார்களுக்கு  www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் குற்றக் காவல்துறையினர் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வர் எனவும்  பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe