வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் திறப்பு: சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

published 2 years ago

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் திறப்பு: சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால், கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி கோவை குற்றாலம் கடந்த 13-ஆம் தேதி மூடப்பட்டது. தொடர்ந்து பெய்து வந்த மழையினால் கடந்த ஒரு வார காலமாகச் சுற்றுலாப் பயணிகளுக்கு அருவிக்குச் செல்ல அனுமதி அளிக்கவில்லை.

இதனால், பலர் சாடிவயல் பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து வந்தனர். இதனிடையே தண்ணீர் வருவது குறைந்ததால் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

இதனையடுத்து நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை என்ற கால அட்டவணையின் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், காலை 10 மணிக்கு அனுமதிச் சீட்டு பெற்றுச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மதியம் ஒரு மணிக்குள் நீர்வீழ்ச்சி பகுதியிலிருந்து வெளியே வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe