பிளஸ்-1 தேர்வுகள் தொடங்கின: கொரோனா முன்னெச்சரிக்கையுடன் தேர்வுகள் நடத்தப்பட்டன

published 2 years ago

பிளஸ்-1 தேர்வுகள் தொடங்கின: கொரோனா முன்னெச்சரிக்கையுடன் தேர்வுகள் நடத்தப்பட்டன

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE 

கோவை: தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று மொழி பாடத்திற்கான தேர்வு நடந்தது.
இத்தேர்வினை கோவை வருவாய் மாவட்டத்தில் பள்ளிகளின் மூலமாக 119 மையங்களில் 37 ஆயிரத்து 33 மாணவ, மாணவிகளும், 4 மையங்களில் தனித்தேர்வர்களாக 2 ஆயிரத்து 090 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுகளைப் புகார்களின்றி நடத்தத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
தேர்வு எழுதச் சென்ற மாணவ-மாணவிகளுக்குத் தேர்வு மையத்தின் வெளியே உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டதுடன், கிருமி நாசினி வழங்கப்பட்டது.
தேர்வு எழுதச் சென்ற அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்து இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதனால் அனைத்து மாணவ-மாணவிகளும் முகக் கவசம் அணிந்தபடியே வந்திருந்தனர்.
மேலும் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதைத் தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் தேர்வு மையங்களுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe