சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

published 2 years ago

சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

கோவை: குப்பேபாளையத்தில், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.தொண்டாமுத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட குப்பேபாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்தில், பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

எஸ்.ஐ., அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. 

சேவல் சண்டையில் ஈடுபட்ட, சூலூரை சேர்ந்த மனோஜ் குமார், 27, வெள்ளிமலைபட்டிணத்தை சேர்ந்த குழந்தைவேல், 34, கெம்பனூரை சேர்ந்த மதிஸ், 18 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், இரண்டு சேவல் மற்றும் 900 ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய புள்ளாகவுண்டன்புதூரை சேர்ந்த கார்த்திக்கை, போலீசார் தேடி வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe