கோவையில் பயணி அசந்த நேரத்தில் பிக்பாக்கெட்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

published 2 years ago

கோவையில் பயணி அசந்த நேரத்தில் பிக்பாக்கெட்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவை: திருப்பூர் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் உமா மகேந்திரன் (வயது 33). கூலித்தொழிலாலி. சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் கோவை வந்தார். பின்னர் சின்னியம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கோல்டு வின்ஸ்-க்கு தனியார் பஸ்சில் சென்றார்.

அப்போது அருகில் இருந்த வாலிபர் ஒருவர் நைசாக உமா மகேந்திரன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து ஓட்டம் பிடித்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உமா மகேந்திரன் சத்தம்போட்டு அவரது நண்பர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தார். பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் வேலூரை சேர்ந்த மாரியப்பன் (வயது32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe