கோவையில் கட்டப்பட்ட அரசு குடியிருப்பில் பலான செயல்கள்.. 224 வீடுகள் பாழாகும் அவலம்

published 2 years ago

கோவையில் கட்டப்பட்ட அரசு குடியிருப்பில் பலான செயல்கள்.. 224 வீடுகள் பாழாகும் அவலம்

கோவை: சுந்தராபுரம் - குனியமுத்துார் இடைப்பட்ட பகுதியில், சுகுணாபுரம் அருகே, மாநகராட்சியின் 97 வது வார்டில்  குறிச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது அரசு அடுக்குமாடி குடியிருப்பு.

மலையின் உச்சியில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு பார்ப்பதர்கு பிரம்மாணடமாக காட்சியளிக்கிறது. சுமார் 3.45 ஏக்கர்  நிலத்தில் கடந்த 2017ம் ஆண்டும் 15 கோடி ரூபாய் மதிப்பில் இந்த குடியிருப்பு கட்டப்பட்டது.

புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்காக தமிழக அரசு கட்டிய இந்த குடியிருப்பில் மொத்தம் 224 வீடுகள் உள்ளன. மொத்தம் 14 பிளாக்குகளில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீடும் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல்அறை, பால்கனி, கழிப்பிடம் என 400 சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது. குடிநீர் மின் இணைப்பும் இந்த குடியிருப்புக்கு வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால், இந்த குடியிருப்பில் தற்போது வரை ஒரு குடும்பம் கூட குடியேறவில்லை. இந்த 224 வீடுகளும் திருநங்கைகளுக்கும், நலிந்த மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இங்கு பாதுகாப்பு குறைபாடுகள் அதிகமாக இருப்பதால் இதுவரை யாரும் இங்கு குடிபுகாமல் உள்ளனர்.

5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாடில்லாமல் இருக்கும் இந்த குடியிருப்பில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. 224 குடியிருப்புகளிலும் மது பாட்டிகள், சுவர்களில் அருவறுக்கத்தக்க படங்கள் வரையப்பட்டுள்ளன.

இரவு  நேரங்களில் இங்கு விபச்சாரமும் தாராளமாக நடைபெறுவதாக சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு வயர்கள், தண்ணீர் குழாய்கள், இரும்பு ஜன்னல்கள் என அனைத்தும் சூறையாடபட்டுள்ளது.

புதர் மண்டி கிடக்கும் இந்த குடியிருப்பை புணரமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதே பயனாளிகளின் கோரிக்கையாக உள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe