புலியகுளம் அருகே இளைஞர் தற்கொலை போலீசார் விசாரணை

published 2 years ago

புலியகுளம் அருகே இளைஞர் தற்கொலை போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). லேப் டெக்னீசியன். 

இவர் ராமநாதபுரம் பகுதியில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறைக்கதவு கடந்த 4 நாட்களாக பூட்ப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் அந்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து, அறைக்கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு கார்த்திக் உடல் அழுகிய நிலையில் பிணமாக காணப்பட்டார். உடலில் காயங்கள் இல்லாத நிலையில் அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், காதல் தோல்வி அல்லது கடன் தொல்லை காரணமாக . அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி உள்ளதுடன், அவருடன் வேறு யாரும் தங்கியிருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe