மதுக்கரையில் தனியார் பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து

published 2 years ago

மதுக்கரையில் தனியார் பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:   https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை: போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 34). இவர் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று தினேஷ் வழக்கம்போல வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது  கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

இதையடுத்து கோவைப்புதூர் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையங்களிலிருந்து  2 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் கடையிலிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது தெரிகிறது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்கான காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe